செய்திகள்
ஐ பெரியசாமி

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா? காங்கிரசா? - ஐ.பெரியசாமி பதில்

Published On 2019-09-18 03:29 GMT   |   Update On 2019-09-18 03:29 GMT
நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா? காங்கிரசா? என்பது தொடர்பான முடிவை கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று ஐ.பெரியசாமி கூறினார்.
நெல்லை:

முன்னாள் அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மக்களின் ஆதரவு தி.மு.க.வுக்குத்தான் உள்ளது. நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். இது தொடர்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார். இங்கு காங்கிரஸ் கட்சியும் ஆலோசனை நடத்தியது, தங்களது தொண்டர்களை தயார் படுத்துவதற்குத்தான். அதேபோல் தற்போது தி.மு.க. சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.



தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தான் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா?, காங்கிரசா? என்பது தெரியவரும். இது தொடர்பான முடிவை கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News