செய்திகள்
ஐகோர்ட்டுக்கு 6-வது நாளாக தலைமை நீதிபதி வரவில்லை
தலைமை நீதிபதி தஹில் ரமானி இன்று 6-வது நாளாக கோர்ட்டுக்கு வரவில்லை. அவருக்காக எந்த வழக்கும் விசாரணைக்கு ஒதுக்கப்படவில்லை.
சென்னை:
மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி தன் பதவியை கடந்த 6-ந் தேதி ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இதன் பின்னர் கடந்த 9-ந் தேதி முதல் அவர் ஐகோர்ட்டுக்கு வரவில்லை. அன்று அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகள் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரணை நடத்தினார். அதன் பின்னர் கடந்த வாரம் 5 நாட்களும் அவர் கோர்ட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில், 6-வது நாளாக இன்று அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. அவருக்காக எந்த வழக்கும் விசாரணைக்கு ஒதுக்கப்படவில்லை.
மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி தன் பதவியை கடந்த 6-ந் தேதி ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இதன் பின்னர் கடந்த 9-ந் தேதி முதல் அவர் ஐகோர்ட்டுக்கு வரவில்லை. அன்று அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகள் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரணை நடத்தினார். அதன் பின்னர் கடந்த வாரம் 5 நாட்களும் அவர் கோர்ட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில், 6-வது நாளாக இன்று அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. அவருக்காக எந்த வழக்கும் விசாரணைக்கு ஒதுக்கப்படவில்லை.