செய்திகள்
விபத்து

சாத்தூரில் டிராக்டர் மோதி ரெயில்வே தொழிலாளி பலி

Published On 2019-09-15 06:56 GMT   |   Update On 2019-09-15 06:56 GMT
சாத்தூரில் டிராக்டர் மோதியதில் ரெயில்வே தொழிலாளி பலியானார்.

விருதுநகர்:

மதுரை-நாகர்கோவில் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் கூடாரங்கள் அமைத்து அங்கேயே தங்கி இரவு பகலாக பணி செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விஜயரங்கன் (வயது 60). இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள கூடாரத்தில் தங்கி ரெயில்வே பணி செய்து வருகிறார்.

நேற்று மாலை விஜயரங்கன் கூடாரத்தின் அருகே அமர்ந்து இருந்தார். அப்போது ரெயில்வே பணியில் இருந்த சங்கர் அங்கிருந்த டிராக்டரை பின் நோக்கி எடுத்தார். அது எதிர்பாராதவிதமாக விஜயரங்கன் மீது மோதியது.

பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் விஜயரங்கன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News