செய்திகள்
கோப்பு படம்

கும்பகோணம் அருகே ஓய்வு பெற்ற பெண் சார்பதிவாளர் மர்ம மரணம் - மகள் போலீசில் புகார்

Published On 2019-09-14 15:05 GMT   |   Update On 2019-09-14 15:05 GMT
கும்பகோணம் அருகே ஓய்வு பெற்ற பெண் சார்பதிவாளர் மர்ம முறையில் உயிரிழந்ததாக அவரது மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கும்பகோணம்:

கும்பகோணம் அருகே திருமங்கலகுடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணி. இவரது மனைவி ஜானகி (வயது81). ஓய்வு பெற்ற சார் பதிவாளர். ஜானகி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 10.45 மணியாகியும் ஜானகியின் வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் அருகில் உள்ள வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது அங்கு வாயில் ரத்தம் கசிந்த நிலையில் ஜானகி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடன் இதுபற்றி அவரது மகள் கெஜலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் தனது தாய் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கெஜலட்சுமி திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News