செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.மணி சந்தித்த காட்சி.

சேலத்தில் இன்று எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.மணி சந்திப்பு

Published On 2019-09-11 06:30 GMT   |   Update On 2019-09-11 06:30 GMT
சேலத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சேலம்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சேலம் வந்தார். அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

சேலத்தில் இன்று காலை நடந்த சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் மகன் ஜனார்த்தனன்- சவுந்தர்யா திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் அவர், நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்திற்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் நேரில் சந்தித்து, வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்து வெற்றி பயணம் செய்ததை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.

மேலும், சேலம் மாநகர பா.ஜ.க. நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News