செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2019-09-11 04:12 GMT   |   Update On 2019-09-11 04:12 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 68 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:

கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணைகளில் இருந்து பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கலுக்கு வருகிறது.

ஒகேனக்கலில் நேற்று மாலை 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் செல்கிறது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூருக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 68 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக 65 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 900 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீருக்கு இணையாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நீர்மட்டம் அதே அளவில் நீடிக்கிறது. நேற்று 120.74 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்றும் அதே அளவில் நீடித்தது. காவிரியில் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளளதால் சேலல், நாமக்கல் உள்பட டெல்டா பகுதிக்குட்பட்ட 12 மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் நீடிக்கிறது.
Tags:    

Similar News