செய்திகள்
கைது

பெரியபாளையத்தில் முட்புதரில் செம்மரக்கட்டைகள் பதுக்கல் - 2 வாலிபர்கள் கைது

Published On 2019-09-07 06:31 GMT   |   Update On 2019-09-07 06:31 GMT
பெரியபாளையத்தில் முட்புதரில் செம்மரக்கட்டைகள் பதுக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரருகின்றனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் வ.உ.சி நகர் முட்புதரில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு முட்புதர்களை அகற்றி சோதனை செய்தனர்.

அப்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

250 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக பெரியபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜார்ஜ், சதீஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News