செய்திகள்
சிபி ராதாகிருஷ்ணன்

எங்களை வீழ்த்தி வெற்றி பெற்றார் - மு.க. ஸ்டாலினுக்கு பா.ஜனதா பாராட்டு

Published On 2019-09-05 09:51 GMT   |   Update On 2019-09-05 09:51 GMT
கலைஞருக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றி பெற்ற தளபதியாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று பாஜக முன்னாள் எம்.பி. சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:

தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தி.மு.க. உயர்மட்ட குழு உறுப்பினருமான வெள்ளகோவில் சாமிநாதன் இல்ல திருமண விழா திருப்பூர்-காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். விழாவில் தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் மத்திய கயிறு வாரிய குழு தலைவரும், கோவை தொகுதி பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யுமான சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.



அப்போது அவர், கலைஞருக்கு பிறகு எங்கள் எல்லோரையும் வீழ்த்தி வெற்றி பெற்ற தளபதியாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

ஸ்டாலின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தி உள்ளது என பேசினார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து இருந்தது. தற்போது வரை கூட்டணி நீடிக்கிறது.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டி பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News