செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

மதுரை, திருவாரூர், திருச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

Published On 2019-09-05 08:38 GMT   |   Update On 2019-09-05 08:38 GMT
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 7-ந்தேதி மற்றும் 8-ந் தேதிகளில் மதுரை, திருவாரூர், திருச்சியில் சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணி நிர்வாகிகளை சந்திக்கிறார்.
சென்னை:

தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 7-ந்தேதி மற்றும் 8-ந் தேதிகளில் மதுரை, திருவாரூர், திருச்சியில் சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணி நிர்வாகிகளை சந்திக்கிறார்.

வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு சங்கம் கிராண்ட் ஓட்டலில் நெல்லை மத்திய மாவட்டத்துக்குட்பட்ட பகுதி, ஒன்றிய, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணலில் பங்கேற்கிறார். பின்னர் மதுரை மாநகர் மாவட்டத்துக்குட்பட்ட இளைஞர் அணி பகுதி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணலை நடத்துகிறார்.

பகல் 11.30 மணிக்கு மதுரை கிழக்கு தொகுதி நாராயணபுரத்தில் இளைஞர் அணியினர் குளத்தை தூர்வாரி கரையை மேம்படுத்தி நடைபாதை அமைத்துக் கொடுத்ததை மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குகிறார்.

வருகிற 8-ந்தேதி காலை 7 மணிக்கு திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இளைஞர் அணி சார்பில் நீர் நிலை மேம்படுத்தும் பணியில் பங்கேற்கிறார். காலை 7.30 மணிக்கு கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் திருக்குவளையில் உள்ள கே.கே.நகர் குளத்தினை இளைஞர் அணியினர் தூர்வாரும் பணியை மேற்கொண்டு சீரமைத்ததை பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குகிறார்.

காலை 10 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணியினருடன் நேர்காணல் நடத்துகிறார். பின்னர் திருச்சி வடக்கு, தெற்கு மாவட்ட இளைஞர் அணியினருடன் நேர்காணல் நடத்துகிறார்.
Tags:    

Similar News