செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1 அடி சரிவு

Published On 2019-09-04 04:23 GMT   |   Update On 2019-09-04 04:23 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கடந்த 2 நாட்களில் மட்டும் அணை நீர்மட்டம் ஒரு அடி சரிந்துள்ளது.
மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நேற்று 10 ஆயிரத்து 189 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 10 ஆயிரத்து 235 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 18 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

கடந்த 2-ந் தேதி 117.2 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 116.7 அடியாக சரிந்தது. இன்று மேலும் அரை அடி சரிந்து 116.2 அடியானது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்காத பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News