செய்திகள்
விபத்தில் பலியான பிரகாஷ்

கரூர் அருகே விபத்து- அறநிலையத்துறை அதிகாரி பலி

Published On 2019-08-31 05:34 GMT   |   Update On 2019-08-31 05:34 GMT
கரூர் அருகே இன்று காலை தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் அறநிலையத்துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி:

மதுரை தாசில்தார்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36). இவர் விருதுநகரில் இந்து சமய அறநிலையத்துறையில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இன்று காலை மதுரையில் இருந்து கரூருக்கு காரில் புறப்பட்டார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஜவுளி பூங்கா அருகே செல்லும் போது போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பிரகாஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த தகவல் அறிந்ததும் அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News