செய்திகள்
7 பேர் விடுதலையில் ஜெயலலிதா முடிவில் மாற்றம் இல்லை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து ஜெயலலிதா எடுத்த முடிவே தற்போது அ.தி.மு.க.வி.ன். நிலைப்பாடாகும் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்வர் வெளிநாடு சுற்றுப் பயணத்தில் உடன் செல்லாமல் இருப்பது குறித்து முதல்வர் ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டார். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து மறைந்த முதல்வர் ஜெயலிதா ஆட்சி காலத்தில் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் ஆளுநரின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் விட்டுள்ளதால் தற்போது அவரது தீவிர பரிசீலனையில் உள்ளது.
எனவே 7 பேர் விடுதலையில் ஜெயலலிதா எடுத்த முடிவே தற்போது அ.தி.மு.க.வி.ன். நிலைப் பாடாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.