செய்திகள்
ஒகேனக்கல்லை அடுத்த ஆலம்பாடி பகுதியில் மலைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் காட்சி.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2019-08-24 05:17 GMT   |   Update On 2019-08-24 05:17 GMT
ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 19 ஆயிரம் கணஅடியாக வந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல்:

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. தற்போது நீர்வரத்து வெகுவாக குறைந்து உள்ளது.

நேற்று காலை 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 11 மணிக்கு பிறகு 19 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று நீர்வரத்து குறைந்து 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

17-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. அதேபோல பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இன்றும் விடுமுறை நாள் என்றாலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. 

Tags:    

Similar News