செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

Published On 2019-08-17 07:50 GMT   |   Update On 2019-08-17 07:50 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.28,856-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

கடந்த 1-ந் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. உச்சக்கட்டமாக கடந்த 13-ந் தேதி பவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ. 29 ஆயிரத்து 16 ஆக இருந்தது.

பின்னர் விலை குறைந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ. 280 குறைந்து ரூ. 28 ஆயிரத்து 664 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ. 192 உயர்ந்துள்ளது.

ஒரு பவுன் ரூ. 28 ஆயிரத்து 856 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 24 ஆதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 3,607-க்கு விற்கிறது.

தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 100 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 47 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 47.90-க்கு விற்கிறது.
Tags:    

Similar News