செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

Published On 2019-08-15 06:36 GMT   |   Update On 2019-08-15 06:36 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.28,944-க்கும் விற்பனையானது.
சென்னை:

ஆபரண தங்கம் விலை கடந்த 1-ந்தேதி முதல் தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. அன்று ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 480 ஆக இருந்தது. அதையடுத்து நாள்தோறும் விலை அதிகரித்தது.

உச்சகட்டமாக நேற்று முன்தினம் (13-ந்தேதி) பவுன் ரூ.29 ஆயிரத்து 16-க்கு விற்றது. 12 நாட்களில் பவுனுக்கு ரூ.2536 அதிகரித்து இருந்தது.

உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாகவும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பாலும் இந்த விலை உயர்வு இருந்தது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் சரிவும் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

13 நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலையில் நேற்று சரிவு ஏற்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.392 குறைந்து இருந்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் அதிகரித்தது.

இன்று காலை கிராம் ரூ.3618-க்கும், பவுன் ரூ.28,944-க்கும் விற்பனையானது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்ட இருக்கிறது.

இதேபோல வெள்ளி விலையிலும் உயர்வு காணப்பட்டது. ஒரு கிராம் ரூ 48.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.48,700 ஆகவும் இருந்தது.

Tags:    

Similar News