செய்திகள்
கொல்லப்பட்ட குழந்தைகள் சக்தி அனுசுயா, துரைசிங்.

பாளை கே.டி.சி. நகரில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை ஏன்?- பரபரப்பு தகவல்கள்

Published On 2019-08-14 06:25 GMT   |   Update On 2019-08-14 06:25 GMT
பாளை கே.டி.சி. நகரில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை ஏன்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
நெல்லை:

பாளை கே.டி.சி. நகரில் உள்ள எல்.ஜி. நகரை சேர்ந் த கட்டிடதொழிலாளி மிக்கேல். இவருடைய மனைவி மாரியம்மாள்(வயது31). இவர்களுக்கு சக்திஅனுசுயா (5) என்ற மகளும், துரைசிங் (3) என்ற மகனும் இருந்தனர். சக்தி அனுசுயா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தாள்.

நேற்று மாலை வேலை முடிந்து மிக்கேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் பாளை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதிராஜா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மாரியம்மாள் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது மகள் சக்தி அனுசுயா தரையில் படுத்த நிலையில் பிணமாக கிடந்தார். துரைசிங் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். உடனே அவனை மீட்டு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவனும் உயிரிழந்தான். ஒரே வீட்டில் 3 பேர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த உருக்கமான தகவல்கள் விபரம் வருமாறு:-

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக மாரியம்மாள் மனநிலை பாதிப்பில் கணவருடன் தகராறு செய்து வந்துள்ளார். அவர் நடவடிக்கை வித்தியாசமாக இருந்ததால், மிக்கேல், தனது மனைவியை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளார். சில நாட்கள் அவர் மாத்திரை சாப்பிடவில்லை என்றால் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி தகராறில் ஈடுபடுவாராம்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவருடைய ஒரு வயது பெண் குழந்தை அனலியா பிரசாசினியை துணியால் முகத்தில் அழுத்தி மூச்சை நிறுத்தி கொலை செய்துள்ளார். அப்போது மிக்கேலும், அவரது உறவினர்களும் குழந்தை இயற்கையாக இறந்துவிட்டது என்று கூறி அடக்கம் செய்து விட்டனர்.

இந்தநிலையில் நேற்றும் மனநிலை பாதிப்பில் அவருடைய மகள் சக்தி அனுசுயா, மகன் துரைசிங் ஆகியோரை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார். அதன் பிறகு மாரியம்மாளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பாளை தாலுகா போலீசார் மாரியம்மாளின் உறவினர்களிடம் அவருக்கு திருமணத்திற்கு முன்பே மனநிலை பாதிப்பு உள்ளதா? அல்லது இடையில் வந்ததா? அல்லது மாரியம்மாய் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்ய வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாரியம்மாள் மற்றும் அவரது 2குழந்தைகளின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 3 பேரின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி துடித்தனர்.
Tags:    

Similar News