செய்திகள்
பாலகிருஷ்ணன்

மோடியும், அமித் ஷாவும் ஹிட்லர்-முசோலினி என்பதை ரஜினி விரைவில் புரிந்து கொள்வார்- பாலகிருஷ்ணன்

Published On 2019-08-12 12:36 GMT   |   Update On 2019-08-12 12:36 GMT
பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஹிட்லர்-முசோலினி என்பதை ரஜினி விரைவில் புரிந்து கொள்வார் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருவாரூர்:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூரில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுவரொட்டி ஒட்டிய மாணவர்களுக்கு பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மோடி அரசின் தலையாட்டி பொம்மைகளாக செயல்பட்டு வருகின்றனர்.

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணரும் அர்ஜூனனும் போல செயல்படுகின்றனர் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


அவர்கள் இருவரும் ஹிட்லரும் முசோலினியும் போல என்பதை ரஜினிகாந்த் விரைவில் புரிந்து கொள்வார்.

மேட்டூர் அணை அபாய கட்டத்தை நெருங்கும் முன் படிப்படியாக தண்ணீரை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீர்நிலைகளில் தண்ணீர் சேமிக்க ஏதுவாக இருக்கும்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கைவிட்டு காவிரி படுகையை மேம்படுத்த ஆய்வு குழு அமைத்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News