செய்திகள்
தற்கொலை

காதல் தோல்வி - கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2019-07-22 10:24 GMT   |   Update On 2019-07-22 10:24 GMT
கோவை வடவள்ளி அருகே காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

கோவை வடவள்ளி அருகே உள்ள லிங்கனூரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 21). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கிருஷ்ணகுமார் தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மாணவி, கிருஷ்ணகுமாரிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

நேற்று வீட்டில் இருந்த கிருஷ்ணகுமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவரின் தற்கொலை குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News