செய்திகள்
ரெயில்வே தண்டவாளம்

தண்டவாளத்தில் தலை வைத்து காதல் ஜோடி தற்கொலை

Published On 2019-07-22 06:52 GMT   |   Update On 2019-07-22 06:52 GMT
கெலமங்கலம் அருகே திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்காததால் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்துள்ள ராமசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் மல்லேஷ் (வயது25). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கிருஷ்ணப்பா மகள் ஜோதி 21 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

இந்தநிலையில் இவர்களது காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்கு இருவரது வீட்டின் பெற்றோர்களும் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட காதல்ஜோடி மல்லேஷ், ஜோதி இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு கெலமங்கலம் அருகேயுள்ள பைரமங்கலம் ரெயில்வே கேட் அருகே வண்டியை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் மல்லேஷ், ஜோதி தற்கொலை செய்ய முடிவு செய்து காருகொண்டபள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியலில் மல்லேஷ், ஜோதி ஆகிய 2 பேரின் உடல் துண்டாகி கிடந்தது. இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஓசூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ரெயில் மோதி தண்டவாளத்தில் பிணமாக கிடந்த காதல் ஜோடி மல்லேஷ், ஜோதி ஆகிய 2 பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News