செய்திகள்
பலியான கோமதி, நவிஸ்ரீ.

திருவாரூர் அருகே குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

Published On 2019-07-20 08:38 GMT   |   Update On 2019-07-20 08:38 GMT
திருவாரூர் அருகே 3 வயது பெண் குழந்தையுடன் பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர்:

திருவாரூர் அருகே கேக்கரையை சேர்ந்தவர் செல்வம் (வயது 38) கொத்தனார். இவரது மனைவி கோமதி (33), இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நாகஸ்ரீ (7), நவிஸ்ரீ (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த கோமதி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில தனது மகள் நவிஸ்ரீயுடன் கேக்கரை ரெயில் தண்டவாளம் பகுதிக்கு சென்று சென்னையில் இருந்து மன்னார்குடி வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோமதியும், நவிஸ்ரீயும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தெரியவந்ததும் திருவாரூர் ரெயில்வே போலீசர் 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News