செய்திகள்
கொலை

கள்ளக்காதல் அம்பலமானதால் 5 வயது சிறுவனை அடித்து கொன்ற தாய்

Published On 2019-07-16 11:45 GMT   |   Update On 2019-07-16 11:45 GMT
கள்ளக்காதல் அம்பலமானதால் தனது 5 வயது மகனை அடித்து கொன்ற தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் கோம்பை மதுரைவீரன் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது37). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ஹரிஷ் (5) என்ற மகன் இருந்தான். அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று கோம்பை- தேவாரம் சாலையில் உள்ள மயானத்தில்  ஹரிஷ் இறந்து கிடந்தான். அவனது உடலில் காயங்கள் இருந்தது. இது குறித்து கோம்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஹரீஸ் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. போலீசார் தெரிவிக்கையில், முருகனுக்கும், கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.

அதன்பிறகு முருகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கீதா, உதயகுமார் என்பரை திருமணம் செய்து கொண்டார். தனது மகன் ஹரிஷை கீதா தன்னுடனே வைத்திருந்தார். கீதாவின் தங்கை புவனேஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு கார்த்திக் அடிக்கடி கீதா வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதேபோல புவனேஸ்வரியும், உதயகுமாரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனை ஹரிஷ் பார்த்து விட்டான். இதனால் தனது கள்ளக்காதலை வெளியில் யாரிடமும் சொல்லிவிடுவானோ என கீதா பயந்தார்.

அதன்படி தனது காதலன் மற்றும் கணவருடன் சேர்ந்து குழந்தையை தீர்த்துகட்ட முடிவு செய்தார். அதன்படி பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய தனது மகன் ஹரிஷை கீதா கல்லால் தாக்கி கொலை செய்தார். பின்னர் அவனது உடலை சுடுகாட்டில் புதைத்து விட முடிவு செய்தனர்.

ஆனால் அதற்குள் பொதுமக்கள் அங்கு திரண்டு வரவே போலீசில் சிக்கி உள்ளனர். இது குறித்து போலீசார் கீதா உள்பட 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். கள்ளக்காதலுக்காக தனது குழந்தையையே தாய் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News