செய்திகள்
கர்ப்பம்

சேலம் அருகே ஆசிரியர் பலாத்காரத்தால் கர்ப்பமான மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2019-07-13 10:09 GMT   |   Update On 2019-07-13 10:09 GMT
ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமான மாணவி சேலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்ப்பத்தை கலைக்க அவரது தாய் முடிவு செய்துள்ளார்.

சேலம்:

சேலம் வேம்படிதாளம் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர் பாலாஜி (வயது 45). இவர் அந்த பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவியை 5 மாதங்களுக்கு முன்பு பள்ளி ஆய்வகத்தில் வைத்து பலாத்காரம் செய்தார்.

மேலும் அதனை வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்குபதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆசிரியருக்கு எதிராக பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இந்த நிலையில் மாணவியின் கர்ப்பத்தை கலைக்க அவரது தாய் முடிவு செய்தார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாணவி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கர்ப்பத்தை கலைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News