நான் சினிமா நடிகரா? செல்பி எடுத்தவர்களிடம் நாராயணசாமி கேள்வி
புதுச்சேரி:
புதுவைக்கு சுற்றுலா வந்த திருவண்ணாமலை சுற்றுலா பயணிகள் சட்டசபை எதிரில் நின்றிருந்தனர். அப்போது சட்டசபைக்கு வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி காரில் இருந்து இறங்கி வந்து அவர்களிடம் பேசினார்.
புதுவை பிடித்திருக்கிறதா? என கேட்டார். அதற்கு அவர்களும் புதுவை அழகாகவும், சுத்தமாகவும் உள்ளது என்றனர்.
மேலும் அவர்கள் முதல்-அமைச்சருடன் செல்பி எடுத்து கொள்ள விரும்பினார்கள்.
இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி நான் என்ன நடிகரா? என கேட்க, அவர்கள் முதல்வருடன் செல்பி எடுப்பது பெருமை என கூறி செல்பி எடுத்து கொண்டனர்.
இதனையடுத்து திருச்சியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
திருச்சி கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்களாகிய நாங்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் சந்திப்பதாக முதல்வரிடம் தெரிவித்தனர். அவர்களை முதல்- அமைச்சர் நாராயணசாமி வாழ்த்தினார்.