செய்திகள்
கைது

திருப்பூரில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- முதியவர் கைது

Published On 2019-07-07 12:09 GMT   |   Update On 2019-07-07 12:09 GMT
திருப்பூரில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்:

திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 62). பெயிண்டர். சம்பவத்தன்று இரவு அங்கு விளையாடிய 6 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்தார். குழந்தை அழும் சத்தம்கேட்டு அங்கிருந்த பெண் ஒருவர் ஓடிச்சென்று பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தம் போட்டார்.

பின்னர் குழந்தை மீட்கப்பட்டது. இது குறித்து சிறுமி தனது பெற்றோருடன் கூறி அழுதார்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் ஜெயபாலன், சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜெயபாலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News