செய்திகள்
அர்ஜூன் சம்பத்

மும்மொழி கல்வி திட்டத்தை கொண்டு வர வேண்டும்- அர்ஜூன் சம்பத் பேட்டி

Published On 2019-07-01 10:03 GMT   |   Update On 2019-07-01 10:03 GMT
மும்மொழி கல்வி திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் வந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் வரவேற்கதக்கது. இந்த திட்டத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது தவறானது. புதிய கல்வி கொள்கை குறித்து மக்கள் கருத்துக்களை பதிவு செய்ய 1 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை 6 மாதமாக நீட்டிக்க வேண்டும்.

கல்வி சீர்திருத்தம் தமிழகத்தில் தேவை. எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் தாய் மொழியில் இருக்க வேண்டும். மழலை, தொடக்க கல்வி வரை தாய்மொழி கட்டாயம். 5-ம் வகுப்புக்கு மேல் தமிழ், ஆங்கிலம் மற்றும் மக்கள் விரும்புகின்ற ஏதாவது ஒரு மொழி என மும்மொழி கல்வி திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் சாரணர் அமைப்பு, ரெட் கிராஸ் அமைப்புகளை தடை செய்ய வேண்டும். தேசிய மாணவர் படை அமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். ஜோதிடம் அறிவியல் பூர்வமானது. இதனை அனைத்து பல்கலைகழகங்களிலும் போதிக்க வேண்டும். அரசு அங்கீகரிக்க வேண்டும்.

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின் போது மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் போன்ஸ்லே மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News