செய்திகள்

நிலக்கோட்டை அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை- 4 பேர் மீது வழக்கு

Published On 2019-06-23 12:34 GMT   |   Update On 2019-06-23 12:34 GMT
காதல் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கணவர், மாமனார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் அருகே உள்ள தேவரப்பன்பட்டியை சேர்ந்தவர் சஞ்சையன். இவரது மனைவி திவ்யபாரதி (வயது 23). இவர்கள் 2 பேரும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திவ்யபாரதியிடம் வரதட்சணையாக 50 பவுன் நகையும் 5 லட்சம் ரொக்க பணமும் கேட்டு கணவன் சஞ்சையன் கொடுமைபடுத்தியுள்ளார். இதற்கு திவ்யபாரதியின் மாமனார் சவடன், மாமியார் காமுத்தாய், மற்றும் உறவினர் பாலமுருகன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளார்கள்.

இது பற்றி திவ்யபாரதி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி சஞ்சையன், சவடன், காமுத்தாய், பாலமுருகன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்தார்.

Tags:    

Similar News