செய்திகள்

கோவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு புத்துணர்வு சிகிச்சை

Published On 2019-06-17 05:33 GMT   |   Update On 2019-06-17 05:33 GMT
கோவையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை பெறுகிறார். இதற்காக அவர் ஒரு வாரத்துக்கு மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற உள்ளார்.
கோவை:

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இயற்கை முறையில் சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு வருவது வழக்கம்.

இதே போல இயற்கை முறையில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக துணை-முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் இரவு தேனியில் இருந்து கோவை வந்தார்.

கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள ஆர்.கே. இயற்கை நல மருத்துவமனைக்கு சென்றார். அவர் புத்துணர்வு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு டாக்டர்கள் இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மருத்துவமனையிலேயே தங்கி இருந்து அவர் சிகிச்சை பெற உள்ளார்.
Tags:    

Similar News