செய்திகள்

சாடிவயல் அருகே நள்ளிரவில் ஒற்றை யானை தாக்கி பெண் பலி

Published On 2019-06-15 04:50 GMT   |   Update On 2019-06-15 04:50 GMT
சாடிவயல் அருகே நள்ளிரவில் ஒற்றை யானை தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை சாடிவயல் அருகே உள்ள போட்டபதி மலை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி நஞ்சம்மாள் (வயது 60). கூலித் தொழிலாளி.

இவர் நள்ளிரவு 1.30 மணியளவில் உடல் உபாதை கழிப்பதற்காக வெளியே வந்தார். அங்கு இருட்டில் நின்று கொண்டு இருந்த ஒற்றை யானை நஞ்சம்மாளை பார்த்ததும் ஆக்ரோசம் அடைந்து விரட்டியது. இதனை பார்த்த அவர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.

விடாது பின் தொடர்ந்து சென்ற யானை தனது துதிக்கையால் நஞ்சம்மாளை தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்து அவர் உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சத்தம் எழுப்பி யானையை காட்டுக்குள் விரடடினர்.

பின்னர் யானை தூக்கி வீசியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நஞ்சம்மாளை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலயே நஞ்சம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News