செய்திகள்

கல்விக்கடன், விவசாயக் கடன்களை திமுக-காங்கிரஸ் எம்பிக்கள் செலுத்த வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2019-06-13 06:02 GMT   |   Update On 2019-06-13 07:13 GMT
தமிழகத்தில் கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன்களை திமுக-காங்கிரஸ் எம்பிக்கள் செலுத்த வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்சி:

முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்  திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் 37 பேரும் தங்கள் சொத்துக்களை விற்று தமிழகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். தமிழகத்தில் கல்விக் கடன் மற்றும் விவசாயக் கடன்களை 37 எம்.பி.க்களும்  செலுத்த வேண்டும்.



பாராளுமன்றத் தேர்தலில் மதவாத அரசியல் செய்தும் மக்களிடையே பொய் பிரசாரம் செய்தும், திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இன்னும் எத்தனை ஆண்டுகாலம் மக்கள் ஏமாளிகளாக இருக்கப் போகிறார்கள்?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News