செய்திகள்
அடர்ந்த வனப்பகுதியான மல்லியம்மன் துர்க்கம் வன கிராமம்.

யானை- சிறுத்தைகளிடம் இருந்து காப்பாற்ற எங்கள் ஊருக்கு வாக்குச்சாவடி மையம் அமைத்து கொடுங்கள்: மலை கிராம மக்கள் வேண்டுகோள்

Published On 2016-10-04 10:58 IST   |   Update On 2016-10-04 10:58:00 IST
யானை மற்றும் சிறுத்தைகளிடம் இருந்து காப்பாற்ற எங்கள் ஊருக்கு வாக்குச்சாவடி மையம் அமைத்து கொடுங்கள் என மலை கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவில் குத்தியாலத்தூர் ஊராட்சி அமைந்துள்ளது.சத்தியமங்கலம் ஒன்றியத்திலுள்ள 15 பஞ்சாயத்துகளில் அதிக வாக்காளர்களை கொண்டது. குத்தியாலத்தூர் ஊராட்சி 12581 வாக்காளர்களை உள்ளடக்கியது.

இதே போல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் வனச் சரகத்திற்குட்பட்ட கிராமம்.மல்லியம்மன்துர்க்கம். இங்கு 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மொத்தம் 446 வாக்காளர்கள் உள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் கொண்டது.

இப்பகுதி சட்டமன்ற தேர்தல் மட்டும் உள்ளாட்சித் தேர்தலின் போது போகவர 18 கி.மீ.தொலைவை அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை,சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட வன விலங்குகள் சர்வசாதாரணமாக நடமாடும். அதையெல்லாம் தாண்டி உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் வந்து ஓட்டு போட வேண் டும்.

பொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் இந்த மலைப்பகுதியிலேயே நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலுக்கு வாக்கு சாவடி அமைத்தது. 75 சதவீதம் வாக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது. இக்கிராம மக்களிடையே வரவேற்பு கிடைத்தது.

ஆனால் தற்போது கல் கடம்பூர் வாக்குசாவடிக்கு சென்று தான் வாக்களிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களது கோரிக்கை என்னவென்றால் இப்பகுதியிலேயே வாக்கு சாவடி அமைக்க வேண்டும் இல்லையெனில் மாற்று ஏற்பாடாக எளிதில் சென்று வரக்கூடிய வகையில் வாகனங்கள் ஏற்பாடு செய்து பாதுகாப்பாக வாக்களித்து விட்டு மீண்டும் ஊரிலேவிட வேண்டும் என்பதே தவிர தேர்தல் புறக்கணிப்பல்ல என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News