செய்திகள்

அந்தியூர் அருகே உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் அறிவிப்பு

Published On 2016-10-03 17:42 IST   |   Update On 2016-10-03 17:42:00 IST
அந்தியூர் அருகேயுள்ள மாத்தூர் ஊராட்சி மணல்காடு பகுதி மக்கள் சாலை வசதிக்காக இடிந்து கிடக்கும் தரைமட்ட பாலத்தை சரிசெய்து தரக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தியூர்:

அந்தியூர் அருகேயுள்ள மாத்தூர் ஊராட்சி மணல்காடு பகுதி மக்கள் சாலை வசதிக்காக இடிந்து கிடக்கும் தரைமட்ட பாலத்தை சரிசெய்து தரக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தியூர்அருகேயுள்ள மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது மணல்காடு கிராமம். இங்கு 80க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மணல்காடு பகுதிக்கு செல்ல மாத்தூரிலிருந்து 4 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அப்படி செல்லும் வழியில் சித்தாறு பள்ளம் செல்கிறது.

இந்தப்பள்ளம் குறுக்கிடும் பகுதியில் உள்ள தரைமட்டப்பாலம் இடிந்து 10 ஆண்டுகளாகிறது. இந்த பகுதி வழியாக தினமும் 100க்கணக்கான போக்குவரத்து வாகனங்கள் வந்து செல்கிறது.

இடிந்து கிடக்கும் பகுதி வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் போது மிகுந்த அச்சத்தில் செல்லவேண்டியுள்ளது. பலமுறை இரவு நேரங்களில் வாகனகளில் செல்வோர் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்து.

மேலும் மழைக் காலங்களில் தண்ணிர் தரமட்ட பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் போது பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்கள் செல்பவர்கள் விடுமுறை எடுக்கும் நிலை உள்ளது.

இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த மண்ல்காடு பகுதி மக்கள் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

Similar News