கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் 2025: திண்டுக்கல் அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நெல்லை ராயல் கிங்ஸ்

Published On 2025-06-26 21:09 IST   |   Update On 2025-06-26 21:09:00 IST
  • சோனு யாதவ் ஆட்டமிழக்காமல் 24 பந்தில் 39 ரன்களும், என்.எஸ். ஹரிஷ் 20 பந்தில் 43 ரன்களும் விளாசினர்.
  • ஆதிஷ் (19), நிர்மல் குமார் (16), ரிதிக் ஈஸ்வரன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 24ஆவது ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியின் சந்தோஷ் குமார் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அருண் கார்த்திக் 6 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஆதிஷ் (19), நிர்மல் குமார் (16), ரிதிக் ஈஸ்வரன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சோனு யாதவ் ஆட்டமிழக்காமல் 24 பந்தில் 39 ரன்களும், என்.எஸ். ஹரிஷ் 20 பந்தில் 43 ரன்கள் விளாச நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

Tags:    

Similar News