கிரிக்கெட் (Cricket)
null

டி.என்.பி.எல். 2025: திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சு தேர்வு

Published On 2025-06-06 19:04 IST   |   Update On 2025-06-06 19:14:00 IST
  • டி.என்.பி.எல். 2025 சீசன் நேற்று தொடங்கியது.
  • முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தியது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசன் நேற்று தொடங்கியது. இன்று கோவையில் நடைபெறும் 2ஆவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பாபா அபரஜித் டாஸ் வென்று பந்து வீச்சை தெர்வு செய்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தொடக்க போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தியது.

திருப்பூர் தமிழன்ஸ் அணி:-

அமித் சாத்விக், துஷார் ராஹேஜா, உதிரசாமி சசிதேவ், கே. ராஜ்குமார், சாய் கிஷோர், முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால், பிரபஞ்சன், எம். மதிவண்ணன், ஆர். சிலம்பரசன், டி. நடராஜன்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி:-

என். ஜெகதீசன், பாபா அபரஜித், அபிஷேக் தன்வர், எஸ் தினேஷ் ராஜ், ஆஷிக் ரஹ்மான், மோஹித் ஹரிகரன், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், பிரேம் குமார், எம். சிலம்பரசன், லோகேஷ் ராஜ்.

Tags:    

Similar News