செய்திகள்
அனுராக் தாகூர்

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? அனுராக் தாகூர் பதில்

Published On 2021-11-27 13:09 GMT   |   Update On 2021-11-27 13:09 GMT
ஆப்பிரிக்காவில் பரவியுள்ள புதிய மாறுபாடு கொரோனா காரணமாக இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் திட்டமிட்ட படி இருக்குமா? என்பது பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.
மும்பை:

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஓமைக்ரான் ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது. 

உலக சுகாதார அமைப்பும் இந்த வகை கொரோனாவை கவலைக்குரிய திரிபாக வரிசைப்படுத்தியுள்ளது.  தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து  ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது.  புதிய வகை கொரோனா பரவலால் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை  சர்வதேச நாடுகள் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளன. 

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பரவியுள்ள புதிய மாறுபாடு கொரோனா காரணமாக இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் திட்டமிட்ட படி இருக்குமா? என்பது பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. 

இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாகூர், “தென் ஆப்பிரிக்கத் தொடர் ரத்தாகுமா என்பதை இப்போதே கூற இயலாது. ஆனால், இந்திய அணியைத் தென் ஆப்பிரிக்கா அனுப்பும் முன் பிசிசிஐ மத்திய அரசிடம் ஆலோசித்து அனுமதி பெற்றே அனுப்ப வேண்டும். 

ஏனென்றால் தென் ஆப்பிரிக்காவில்தான் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. எங்கு கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறதோ அங்கு இந்திய அணியை விளையாட அனுப்புவது சரியான முடிவாக இருக்காது. பிசிசிஐ ஆலோசிக்கும்போது, இதுபற்றி விரிவாகப் பேசுவோம்” என்றார்.
Tags:    

Similar News