செய்திகள்
என்னால் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய முடியும்: சுரேஷ் ரெய்னா
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்காக 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய கிரிக்கெட் அணி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நான்காவது இடத்திற்கு நிலையான வீரரை கண்டுபிடிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.
தற்போது ரிஷப் பந்த் களம் இறங்குகிறார். ரிஷப் பந்தும் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்கவில்லை. இந்நிலையில் நான்காவது இடத்தில் என்னால் களம் இறங்கி விளையாட முடியும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘என்னால் இந்திய அணிக்காக 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாட முடியும். அந்த இடத்தில் நான் ஏற்கனவே களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
தற்போது ரிஷப் பந்த் களம் இறங்குகிறார். ரிஷப் பந்தும் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்கவில்லை. இந்நிலையில் நான்காவது இடத்தில் என்னால் களம் இறங்கி விளையாட முடியும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘என்னால் இந்திய அணிக்காக 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாட முடியும். அந்த இடத்தில் நான் ஏற்கனவே களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.