செய்திகள்
வினோத் ராய்

பிசிசிஐ தேர்தல் நடந்து முடிந்ததும் நிர்வாகக்குழு ராஜினாமா: வினோத் ராய்

Published On 2019-09-26 16:21 GMT   |   Update On 2019-09-26 16:21 GMT
பிசிசிஐ தேர்தல் நடந்து முடிந்ததும் அக்டோபர் 23-ந்தேதி மாலை நிர்வாகக்குழு ராஜினாமா செய்யும் என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
லோதா கமிட்டி பரிந்துரையை பிசிசிஐ நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்த வினோத் ராய் தலைமையில் நிர்வாகக்குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பிசிசிஐ-யில் உள்ள சீர்கேட்டை களைந்து, தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதுதான் நிர்வாகக்குழுவின் வேலை. இந்த வேலை முடியும் வரை வினோத் ராய் குழுவுதான் பிசிசிஐ-யில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரத்தை பெற்று இருந்தது.

இந்நிலையில் அடுத்த மாதம் 23-ந்தேதிக்குள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. இதனடிப்படையில் மாநில சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டன.

அக்டோபர் 23-ந்தேதி பிசிசிஐ தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் முடிந்த பின்னர் நிர்வாகக்குழு ராஜினாமா செய்யும் என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இதனால் 33 மாதங்களாக செயல்பட்டு வந்த நிர்வாகக்குழுவின் செயல்பாடு முடிவுக்கு வர இருக்கிறது.
Tags:    

Similar News