செய்திகள்
தீப்தி சர்மா

டி20-யில் தொடர்ச்சியாக மூன்று மெய்டன் ஓவர்கள்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா சாதனை

Published On 2019-09-25 11:04 GMT   |   Update On 2019-09-25 11:04 GMT
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று ஓவர்களை மெய்டனாக வீசி இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரக்கெட் போட்டி சூரத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. பின்னர் 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. அந்த அணி 19.5 ஓவரில் 119 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய பெண்கள் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்க வீராங்கனை டு ப்ரீஸ் 43 பந்தில் 59 ரன்கள் குவித்த போதிலும், இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற ஆல்-ரவுண்டரான தீப்தி சர்மாவின் பந்து வீச்சுதான் முக்கிய காரணம். அவர் 4 ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். நான்கு ஓவரில் மூன்று ஓவர்கை மெய்டனாக வீசினார். இதன்மூலம் அதிக மெய்டன் ஓவர் வீசிய இந்தியா வீராங்கனை என்ற பெறுமையை பெற்றுள்ளார்.



3-வது ஓவரை மெய்டனாக வீசினார். 5-வது ஓவரை மெய்டனாக வீசி அதில் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார். 14-வது ஓவரை வீசினார். இதில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் ஒரு விக்கெட் வீழ்த்தினா். 19-வது ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
Tags:    

Similar News