செய்திகள்
கொரியா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து முதல் சுற்றோடு வெளியேற்றம்
கொரியா ஓபன் பேட்மிண்டனில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனையான ஷாங் பெய்வென்னை எதிர்கொண்டார். இதில் 21-7, 22-24, 15-21 என பிவி சிந்து அதிர்ச்சிகரமான தோல்வியடைந்து முதல் சுற்றோடு ஏமாற்றம் அடைந்தார்.
உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற பின் நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்துள்ளார் பிவி சிந்து.
உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற பின் நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்துள்ளார் பிவி சிந்து.