செய்திகள்
மணிஷ் பாண்டே, கேஎல் ராகுல்

விஜய் ஹசாரே டிராபி: கர்நாடக அணிக்கு மணிஷ் பாண்டே கேப்டன்- கேஎல் ராகுல் துணைக் கேப்டன்

Published On 2019-09-23 10:28 GMT   |   Update On 2019-09-23 10:28 GMT
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான கர்நாடக அணியின் கேப்டனாக மணிஷ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நாளை தொடங்குகிறது. ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகள் இதில் பங்கேற்கின்றன. தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணியில் மணிஷ் பாண்டே, கேஎல் ராகுல் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

நேற்றோடு டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததால் மணிஷ் பாண்டே மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் கர்நாடக அணிக்கு திரும்பியுள்ளனர். ரஞ்சி டிராபி தொடருக்கான கர்நாடக அணியின் கேப்டனாக மணிஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மணிஷ் பாண்டே, 2. கேல் ராகுல், 3. தேவ்தத் படிக்கல், 4. கேவி சித்தார்த், 5. பிரவின் டுபே, 6. பவன் தேஷ்பாண்டே, 7. அபிஷேக் ரெட்டி, 8. கிருஷ்ணப்பா கவுதம், 9. ஜெகதீஷ சுசித், 10. அபிமன்யு மிதுன், 11. பிரசித் கிருஷ்ணா, 12. ரோனித் மொரே, 13. ஷரத் ஸ்ரீனிவாஸ், 14. ஷ்ரேயாஸ் கோபால், 15. வி. கவுசிக்.
Tags:    

Similar News