செய்திகள்
தீபக் சாஹர், விராட் கோலி

விராட் கோலி நிலைத்தன்மையை எப்படி நிர்வகிக்கிறார் என்று தெரியவில்லை: தீபக் சாஹர்

Published On 2019-09-19 12:04 GMT   |   Update On 2019-09-19 12:04 GMT
இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிலைத்தன்மையை எப்படி நிர்வகிக்கிறார் என்று தெரியவில்லை என வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தொடர்ந்து நன்றாக விளையாடி வருவது மிகவும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹல், விராட் கோலி நிலைத்தன்மையை எப்படி நிர்வகிக்கிறார் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோலி ஆட்டம் குறித்து தீபக் சாஹர் கூறுகையில் ‘‘விராட் கோலி தொடர்ந்து அதிகமான ரன்கள் அடிக்கும் யுக்தியை எப்படி நிர்வகிக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அடுத்த-நிலை (next-level) வீரர்.

டெத் ஓவர்களில் பந்து வீசுவது எனக்கு எளிதானது. ஏனென்றால் பவர்பிளே-யின்போது இரண்டு வீரர்கள் மட்டுமே பவுண்டரி லைன் அருகே நிற்க வைக்க முடியும். எனினும், பவர்பிளேக்குப் பிறகு, ஐந்து வீரர்களை பவுண்டரி லைன் அருகே நிறுத்தலா்ம. ஆகையால் டெத் ஓவர்களில் பந்து வீசுவது எளிது’’ என்றார்.
Tags:    

Similar News