செய்திகள்
தவான், ரிஷப் பந்த்

விஜய் ஹசாரே டிராபி: டெல்லி அணியில் விளையாட தவான், ரிஷப் பந்த், சைனி சம்மதம்

Published On 2019-09-17 15:26 GMT   |   Update On 2019-09-17 15:26 GMT
விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட தவான், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி செப்டம்பர் 24-ந்தேதி தொடங்குகிறது. இதில் டெல்லி அணி உள்பட ரஞ்சி டிராபியில் விளையாடும் அனைத்து அணிகளும் பங்கேற்கின்றன.

இந்தத் தொடரில் விளையாடுவதற்கு தவான், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளன. இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும் என டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ராஜட் சர்மா தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து ராஜட் சர்மா கூறுகையில் ‘‘ரிஷப் பந்த், தவான், நவ்தீப் சைனி டெல்லி அணிக்காக விளையாட எடுத்திருக்கும் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலி மற்றும் இஷாந்த் ஆகியோர் எப்போதுமே டெல்லி அணிக்கு உதவி விரும்பினர். வாய்ப்பு கிடைக்கும்போது அவர்கள் டெல்லி அணிக்காக விளையாடுவார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News