செய்திகள்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டியில் இந்தியா
இலங்கையில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையுடன் மோத இருந்தது. பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது.
லீக் சுற்றில் முதலிடம் பிடித்ததன் அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை (சனிக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.
லீக் சுற்றில் முதலிடம் பிடித்ததன் அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை (சனிக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.