செய்திகள்
மூன்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை அணி இந்தியா வருகிறது
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டுக்கு சிறந்த வகையில் தயாராகும் வகையில் இந்திய அணி இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாட இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் எல்லா அணிகளும் எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு டி20 போட்டிக்கான அட்டவணையை தயார் செய்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் அதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்தியா வந்து விளையாடுகிறது. தற்போது இலங்கை அணியும் இந்தியா வந்தால் போட்டி அட்டவணையை தயாரிக்க இந்தியாவுக்கு கடினமான நிலை ஏற்படும்.
ஆனால் ஒரு வாரத்திற்குள் மூன்று போட்டிகளையும் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2017-ம் ஆண்டுக்குப்பின் இந்தியா - இலங்கை இடையில் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் நடைபெறவில்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியில் அதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்தியா வந்து விளையாடுகிறது. தற்போது இலங்கை அணியும் இந்தியா வந்தால் போட்டி அட்டவணையை தயாரிக்க இந்தியாவுக்கு கடினமான நிலை ஏற்படும்.
ஆனால் ஒரு வாரத்திற்குள் மூன்று போட்டிகளையும் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2017-ம் ஆண்டுக்குப்பின் இந்தியா - இலங்கை இடையில் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் நடைபெறவில்ல என்பது குறிப்பிடத்தக்கது.