செய்திகள்
புரோ கபடி - தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது யு மும்பா அணி
கொல்கத்தாவில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணியை 41 -27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது யு மும்பா அணி.
கொல்கத்தா:
புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ், யு மும்பா அணிகள் மோதின.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் பொறுப்புடன் விளையாடின. இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 15- 15 என சமனிலை வகித்தன.
ஆனால், இரண்டாவது பாதியில் யு மும்பா அணியினர் அதிரடியாக ஆடினர். இறுதியில், யு மும்பா அணி 41 - 27 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் யு மும்பா அணி ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.