செய்திகள்
பாயிண்ட் எடுக்க முனையும் டெல்லி அணியினர்

புரோ கபடி - தபாங் டெல்லியிடம் போராடி தோற்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

Published On 2019-09-04 15:24 GMT   |   Update On 2019-09-04 15:24 GMT
பெங்களூருவில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தபாங் டெல்லி அணியிடம் தோற்றது.
பெங்களூரு:

புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று இரவு நடந்த 73-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் தொடர்ந்து புள்ளிகளை எடுத்து வந்தன. முதல் பாதி முடிவில் டெல்லி அணி 21 - 19 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் ஜெய்ப்பூர் அணி சிறப்பாக ஆடி முன்னிலை பெற்றது.

இறுதியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 46 - 44 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
Tags:    

Similar News