செய்திகள்
துலீப் டிராபி

துலீப் டிராபி: இந்தியா ரெட் - ப்ளூ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது

Published On 2019-08-26 11:38 GMT   |   Update On 2019-08-26 11:38 GMT
துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் இந்தியா ரெட் - இந்தியா ப்ளூ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெற்றித் தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
இந்தியா ரெட், ப்ளூ, க்ரீன் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தியா ரெட் - இந்தியா ப்ளூ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த 23-ந்தேதியில் இருந்து இன்று வரை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரெட் 285 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ப்ளூ 255 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் இந்தியா ரெட் முன்னிலைப் பெற்றதால் அந்த அணி டிராவை நோக்கி போட்டியை அழைத்துச் சென்றது. 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்திருந்தபோது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

அதன்பின் போதிய நேரம் இல்லாததால் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலைப் பெற்ற இந்தியா ரெட் அணிக்கு 3 புள்ளிகளும், இந்தியா ப்ளூ அணிக்கு ஒரு புள்ளிகளும் வழங்கப்பட்டன.

ஏற்கனவே இந்தியா ப்ளூ - இந்தியா க்ரீன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் டிராவில் முடிந்தது.

இந்தியா ரெட் - இந்தியா க்ரீன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்தியா ரெட் வெற்றி பெற்றால் இந்தியா க்ரீன் இறுதிப் போட்டி வாய்பை இழக்கும்.
Tags:    

Similar News