செய்திகள்
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் பிவி சிந்து
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் பிவி சிந்து.
உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. ஒரு காலிறுதியில் இந்தியாவின் பிவி சிந்து சீன தைபேயின் தாய் ஜூ யிங்-கை எதிர்கொண்டார்.
முதல் செட் பிவி சிந்துவுக்கு சிறப்பாக அமையவில்லை. யிங் 21-12 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யிங்கும் பதிலடி கொடுக்க, ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.
இறுதியில் பிவி சிந்து 23-21 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டும் பரபரப்பாகவே சென்றது. இறுதியில் பிவி சிந்து 21-19 எனக் 3-வது செட்டை கைப்பற்றினார். இதனால் 12-21, 23-21, 21-19 என பிவி சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பிவி சிந்து.
முதல் செட் பிவி சிந்துவுக்கு சிறப்பாக அமையவில்லை. யிங் 21-12 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யிங்கும் பதிலடி கொடுக்க, ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.
இறுதியில் பிவி சிந்து 23-21 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டும் பரபரப்பாகவே சென்றது. இறுதியில் பிவி சிந்து 21-19 எனக் 3-வது செட்டை கைப்பற்றினார். இதனால் 12-21, 23-21, 21-19 என பிவி சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பிவி சிந்து.