செய்திகள்
ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட்

ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

Published On 2019-08-22 10:35 GMT   |   Update On 2019-08-22 10:35 GMT
ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே-யில் இன்று தொடங்கியது. போட்டி உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்க வேண்டும்.

மழை பெய்ததால் டாஸ் சுண்டப்படுவதில் காலதாமதம் ஆனது. மழை நின்றதும் டாஸ் சுண்டப்பட்டது. இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்திற்குப் பதிலாக மார்னஸ் லாபஸ்சேக்னே இடம் பிடித்துள்ளார். தொடக்க வீரர் பான்கிராப்ட் நீக்கப்பட்டு மார்கஸ் ஹாரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் பீட்டர் சிடில் நீக்கப்பட்டு ஜேம்ஸ் பேட்டின்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News