செய்திகள்
ஜான்டி ரோட்ஸ்

நேர்காணலில் பங்கேற்ற ஜான்டி ரோட்ஸ்: பயிற்சியாளர் பதவி கிடைக்குமா?

Published On 2019-08-21 10:50 GMT   |   Update On 2019-08-21 10:50 GMT
இந்திய அணியின் பீல்டிங் கோச்சருக்கான நேர்காணலில் தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் கலந்து கொண்டார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களை தேர்வு செய்வதற்கான வேலை நடைபெற்று வருகிறது.

தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த வீரரான ஜான்டி ரோட்ஸ் பீல்டிங் கோச்சர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அவரை தேர்வுக்குழு ஸ்கைப் மூலம் நேர்காணல் நடத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஜூலியன் பவுன்டைன், அபேய் சர்மா ஆகியோர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

மேலும், பேட்டிங் பயிற்சியாளருக்கான நேர்காணலில் விக்ரம் ரத்தோர், பிரவின் அம்ரே ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் தற்போதுள்ள சஞ்சய் பாங்கருக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



தற்போது சஞ்சய் பாங்கர் பேட்டிங் பயிற்சியாளராகவும், பரத் அருண் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், ஆர் ஸ்ரீதர் பீல்டிங் கோச்சராகவும் உள்ளனர்.
Tags:    

Similar News