செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?: இன்று இரவு அறிவிப்பு

Published On 2019-08-16 10:11 GMT   |   Update On 2019-08-16 10:11 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் என்பதை இன்றிரவு பிசிசிஐ அறிவிக்க இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் ரவி சாஸ்திரி, ராபின் சிங், லால் சந்த் ராஜ்பூட் (இந்தியா), டாம் மூடி (ஆஸ்திரேலியா), மைக் ஹெஸ்சன் (நியூசிலாந்து), பில் சிம்மன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய 6 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டது.

இந்த 6 பேரிடம் இன்று மும்பையில் கபில்தேவ் தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது. சிலரிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று இரவு 7 மணிக்கு இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பெயரை கிரிக்கெட் வாரியம் அறிவிக்கிறது.
Tags:    

Similar News